articles

img

அதிகாரம் தருமா அழகான பொய்கள்? - கே.பாலபாரதி மாநில செயற்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

“இந்தியாவின் வளர்ச்சிக்கு பெண்கள் அதிகாரம் பெறுவது முக்கியம். பெண்களை ஹோம் மேக்கர்களாகப் பார்க்கும் நாட்கள் போய்விட்டன. தேசத்தை கட்டி எழுப்பு பவர்களாக பெண்களை நாம் பார்க்கவேண்டும்”

இப்படி பேசியவர் யாரென்று தெரிகிறதா? 

உஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ் கேஸ் சிலிண்டர்களின் பயன்பாட்டில் நாள்பட்ட சுவாசப் கோளாறுகளிலிருந்து புகையற்ற சமையலறை களை உருவாக்கி கோடிக்கணக்கான பெண்களை பாதுகாத்தார். அப்படி பாதுகாத்த இரட்சகர் யார்? தேசிய பாதுகாப்பு பணிகளிலும் ரஃபேல் விமா னங்களில் பறப்பதிலும் பெண்களைக் காணலாம்? பெண்களை மதித்து அதிகாரம் அளித்து சமமாக உணர வைப்பதின் மூலம் மட்டுமே இந்தியா முன்னேற முடியும்.ஆகவே உங்கள் மகளின் பிறந்த நாளன்று 5 மரக்கன்றுகளை நடுங்கள்...என்று அறைகூவல் விடுத்தவர் யார்? வேறு யாருமல்ல நமது இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்தான். மேலே காண்பவை மன் கி பாத்திலும் வேறு சில விழாக்களி லும் மோடி அவர்கள் பெண்களைப் பற்றி பேசிய வசனங்கள் தான் அவைகள். இத்தனை அழகான பொய்களோடு பெண்ணுரிமை காவலர்களாக தங்களை கட்டமைத்துக் கொள்ள வேறு யாரால் முடியும்?  33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை பெயரள வில் கூட விவாதத்திற்கு உட்படுத்தாத பாஜக அரசு பெண்களுக்கு அதிகாரம் வழங்கி உள்ளதாக அளக்கிறது. தமிழ்நாடு கேரளா உள்ளிட்ட மாநிலங்க ளின் உள்ளாட்சி அமைப்புகளில் 50% மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் இயற்றி தேர்தலையும் நடத்தி  50% பெண்களை அதிகாரமிக்க தலைவர்களாக நாற்காலிகளில் அமர வைத்து விட்டார்கள். பாஜக அரசு ஒருசிறு துரும்பையாவது அசைத்ததுண்டா? 

பத்தாம் பசலித்தனம் பழமைவாதம் 

பழங்குடிப் பெண்ணான திரெளபதி முர்முவை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுத்தோமே. இது அதிகார வழங்கல் இல்லையா என வாதிடுகிறார்கள். ஆனால் குடியரசுத்தலைவர் மாளிகையில் அதிகாரங் களற்ற ஒரு எளிய பழங்குடியினர் பெண்ணாக அதே சமயத்தில் அதிகாரமிக்க அம்மாளிகையில் வீற்றிருக்கிறார். நாடாளுமன்றத்தின் புதிய கட்டட திறப்பு விழா விற்கு முதல் குடிமகளாக செல்ல வேண்டிய குடி யரசுத் தலைவர் அந்த விழாவின் எந்த இடத்திலும் காண முடியவில்லை. அழைப்பில்லை என்பதோடு திட்டமிட்டே அவர் புறக்கணிக்கப்பட்டார் என்பதை இந்தநாடே அறிந்து அதிர்ச்சியில் உறைந்தது... பழங்குடியினப் பெண் என்பதால் மட்டுமல்ல அவர் கணவரை இழந்த ஒரு விதவைப் பெண் என்ப தாலும் சுபநிகழ்ச்சியில் பங்கெடுக்கக் கூடாதென்ற பத்தாம் பசலித்தனமான பழமை கருத்தாலும் அவர் ஒதுக்கப்பட்டார். அதிகாரமிக்க அப்பெண்மணியின் அதிகாரம் எங்கே ஓடி ஒளிந்தது? இதுதான் பாஜக அரசுபெண்ணுக்கு கொடுக்கிற “அதிகாரம்”! தேசியப் பாதுகாப்பு பணியிலும் ரபேல் விமா னத்தில் பெண்கள் பறப்பதாலும் அவர்களின் சிறகுகள் அதிகாரத்தோடு இணைக்கப்பட்டதாக அர்த்தம் இல்லை.  

தலைமுடியை கொத்தாகப் பற்றியிழுத்து தங்க மங்கைகளான

     மல்யுத்த வீராங்கனைகள் தலைநகர் டெல்லியில் இரவு பகலாக போராடு கிறார்களே.. அப்போராட்டம் எதன் காரணமாக தொடர்கிறது? ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர் கள் அதனை ஏறெடுத்தும் பார்க்க ஏன் மறுக்கிறார் கள்? பாஜக ஆட்சியில் அவர்களது கட்சியில் எம்பி யாக உள்ள பாலியல் குற்றம்புரிந்த பிரிஜ்பூஷனை ஏன் இன்னும் பெண்களின் அதிகாரம் சுற்றி வளைக்க வில்லை?

   போராடியவர்களை பெண்ணென்றும் பாராமல் அவர்களின் தலைமுடியை கொத்தாகப் பற்றி இழுத்துச்சென்று காவல்துறையின் வாகனத்திற்குள் வீசியெறிந்தார்களே...அதுதான் பெண்களால் கட்டமைக்கப்பட்ட புதிய இந்தியாவா... போக்ஸோ பிரிவில் குற்ற வழக்கு பதிந்த பிறகும் குற்றவாளி மிக சுதந்திரமாக தலைநகரில் நடமாட முடிகிறதே எப்படி?

   அதிகாரமிக்க போக்ஸோ சட்டம் கூட அதிகாரமிழந்து போனது மாண்புமிகு பிரிஜ்பூஷன்களால் தானே. உபி ஹத்ராஸில் 19வயது பட்டியலினப்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்து கொடூர மாக நாக்கை அறுத்து முதுகெலும்பை உடைத்து கழுத்தை நெறித்து கொன்றார்கள்.

   இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியை நீதிமன்றமே விடுவித்து நிர பராதி என தீர்ப்பு வழங்கிய போது அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இதுவரை மேல்முறையீடு செய்யவில்லையே பாஜகவின் உபி அரசு? குஜராத்தில் மட்டும் என்ன வாழ்கிறது... குற்றங் கள் தான் அங்கேயும் வாழ்கிறது. பில்கிஸ் பானு வழக்கில் சிறைக்கு அனுப்பப்பட்ட 12 குற்றவாளி களை விடுதலை செய்து அதை கொண்டாடி மகிழ்ந்த பாஜக கூட்டம் அப்பெண்ணிற்கு நியாயம் வழங்கி யதா அல்லது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தான் செய்ததா? எதுவும் செய்யவில்லை.

   கர்ப்பிணிப் பெண்ணை கைக்குழந்தையின் தாயை கூட்டாக பலாத்காரம் செய்த குற்றத்தை மரக்கன்று கள் நட்டு மறைத்துவிட முடியாது.

   பெண்கள் சிறுமிகள் வாழ்வதற்கு தகுதியற்ற நாடாக இந்தியா மாறிக் கொண்டிருக்கிறது என்ற தாமஸ் ராய்ட்டரின் ஆய்வறிக்கை முன்வைத்த விமர்சனத்தில் வெந்து நொந்து போன பாஜக அரசு பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதாக கூறுவது அப்பட்டமான பொய்கள் அன்றி வேறு என்ன? பெண்கள் குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறை  குற்றங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறதே தவிர  அவைகள் குறைந்த பாடில்லை.

    சட்டங்களை வளைத்து குற்றவாளி களை பாதுகாக்கும் பாஜக அரசு தான் குற்றங்களின் எண்ணிக்கை கூடுவதற்கு அடிப்படை காரணமாகும்.  நவதாராள பொருளாதார கொள்கையின் கூர்மை யான தாக்குதலும் விலைவாசி உயர்வும் பெண்க ளின் ஆரோக்கியத்தை ஈவிரக்கமின்றி பறித்து வருகிறது. ரத்த சோகைக்கு ஆட்பட்ட பெண்கள் வறுமையின் வடிவங்களாகவே உள்ளார்கள்.

    புகையற்ற சமையலறைகளில்  எரிவாயு உருளை களுக்கு கொடுக்கும் விலைகளோ பன்மடங்கு உயர்வு. ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் 100 நாளில் 15 தினங்கள்கூட வேலை கிடைக்காமல்  கிரா மப்புற பெண்களின் வேலைவாய்ப்பை ஒன்றிய பாஜக அரசு பறித்து வருகிறது. திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டில் 33%  குறைக்கப்பட்டதால் செய்து முடித்த வேலைக்கே ஊதியம் பெறமுடியாமல் பெண்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

   அரசுப்பணி களில் விருப்ப ஓய்வு திட்டத்தாலும் புதிய பணியிடங் கள் நிரப்பப்படாத சிக்கன நடவடிக்கையாலும் பெண் களின் வேலை உரிமை  பறிபோய் கொண்டிருக்கிறது. பெண் கல்வி கற்க கூடாது. வேலைக்கு செல்லக் கூடாது. எந்த வயது பெண்ணாக இருந்தாலும் ஆண்களை சார்ந்தே வாழ வேண்டும் என்ற மனுஸ் மிருதி கோட்பாடு பாஜக வடிவில் உயிர் பெற்று வருவதை நாம் அனுமதிக்க முடியாது.

   பெண்ணு ரிமை என்பது பாலின சமத்துவம் மட்டுமல்ல சமூகத்தின் அனைத்து பாரபட்சங்களிலிருந்தும் விடுதலை பெறுவதாகும். அனைத்திலும் சமத்துவத்தை நிலைநிறுத்துவதாகும். மத வெறியை தகர்ப்போம் பெண்ணுரிமையை காப்போம் என்ற முழக்கத்தோடு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜுன் 25ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக  பெண்ணுரிமை மாநாடு நடைபெற இருக்கிறது. சங்கமிப்போம் தோழர்களே...